
நொய்யல் ஆற்றை ரூ.230 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ், கோவையில் 18 அணைக்கட்டுகள், 22 குளங்களைத் தூர்வாரி,சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆச்சான்குளம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெள்ளலூர் ஆகிய இடங்களில் உள்ள குளங்களின் கரைகளில் கான்கிரீட் தளம்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின்போது கரையோரம் உள்ள நாணல் புற்கள், புதர்களை முற்றிலுமாக அகற்றுவதால் குளங்களின் உயிர்ச் சூழல் பாதிக்கப்படும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்தனர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்