
தமிழகத்தில் நீட் தேர்வில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி, நீட் தேர்வின் பாதிப்புகுறித்து குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்விஇயக்குநரகத்தில் கடந்த 14-ம் தேதிநடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று குழு கடந்த வாரம் அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்