
மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை மேம்படுத்த, கட்சி நிர்வாகிகள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் கமல்ஹாசனிடம் அளிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம், நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில்சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவர், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர். மேலும்,நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இதுவரை புதிதாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்