Thursday, June 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/25/large/686009.jpgமுழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் முழு ஊரடங்கு, வரும் 28-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், கடந்த மே 24-ம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு அடுத்தடுத்து 4 கட்டங்களாக ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 21-ம் தேதிகாலை முதல் மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அதன்படி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தொற்று அதிகம் உள்ள11 மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்த தளர்வுகள் தொடர்கின்றன. தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் கடைகள் கூடுதல் நேரம் திறக்க அனுமதி என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 3-வது வகையில் உள்ள சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு உள்ளும், இடையிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், பல்வேறுசேவைகளுக்கு இ-பதிவு வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...