
தமிழகத்தில் முழு ஊரடங்கு, வரும் 28-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், கடந்த மே 24-ம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு அடுத்தடுத்து 4 கட்டங்களாக ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 21-ம் தேதிகாலை முதல் மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அதன்படி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தொற்று அதிகம் உள்ள11 மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்த தளர்வுகள் தொடர்கின்றன. தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் கடைகள் கூடுதல் நேரம் திறக்க அனுமதி என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 3-வது வகையில் உள்ள சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு உள்ளும், இடையிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், பல்வேறுசேவைகளுக்கு இ-பதிவு வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்