
தமிழகத்தில் பல இடங்களில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்.களில்நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது 10 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரையும் கைது செய்ய சென்னை தனிப்படை போலீஸார் வடமாநிலங்களில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறி வைத்து கும்பல் ஒன்று நூதனமுறையில் பணம் கொள்ளையடித்தது. அதாவது, எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தும் வசதி கொண்ட இயந்திரங்களை குறிவைத்து ஒரே பாணியில் கடந்த 15-ம் தேதியிலிருந்து 18-ம் தேதிக்குள் அடுத்தடுத்து பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்