
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இவற்றின் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும், ஊரடங்கில்தளர்வு காரணமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதாலும் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளும் முழு அளவில் இயக்கப்பட்டு வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்