
செங்கை மாவட்டத்தில் மின்தடை ஏற்படாமல் தடுக்கும் வகையில், பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மின் கட்டமைப்புகளில், மின் கம்பிகளுக்குஅருகிலுள்ள மரங்களின்கிளைகளை அகற்றியும், பழுதான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, மின் பயன்பாடு குறைந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்