
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதில் 78-வது நிகழ்ச்சியாக நேற்று பிரதமர் உரையாற்றினார்.
தாம்பரம் நகர பாஜக சார்பில் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் தாம்பரம், சண்முகம் சாலையில் பிரம்மாண்ட எல்இடி திரை அமைத்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்