
கரோனா ஊரடங்கால் மூடப்பட் டுள்ள ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், நகை அடகுக் கடைகளை திறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா 2-வது அலை பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பாகவே அரசு உத்தரவின்பேரில் 3 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கடைகள், வணிக வளா கங்கள் அடைக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்