
திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் கொள்ளையர்கள் தாக்கியதால் உயிரிழந்த ஒப்பந்த நியமனக் காவலர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் பாபு என்பவர், ஒப்பந்த அடிப்படையில் காவலராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 17-ம் தேதி கோயில் உண்டியலை கொள்ளையடிக்க வந்த கும்பலால் பாபு தாக்கப்பட்டார். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாபு, கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்