
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன், சமூக வலைதளங்களில் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பிய கிஷோர் கே.சாமி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜகோபாலன் (59). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச தகவல்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்