
சென்னிமலை அருகே கரோனா மாத்திரை எனக்கூறி விஷ மாத்திரையைக் கொடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கடன் விவகாரம் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பணன் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா (58), மகள் தீபா (30). இவர்களது தோட்டத்தில் குப்பம்மாள் (65) என்பவர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர்களது தோட்டத்துக்கு வந்த மர்மநபர், தான் கரோனா சிகிச்சை முகாமில் இருந்து வருவதாகக் கூறி, தொற்று ஏற்படாமல் இருக்க சத்து மாத்திரையைச் சாப்பிடுமாறு கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்