
கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் (MSME) தினமாக ஜூன் 27 -ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டும், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்கும் வகையிலும், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுப்போம்’ என்ற சிறப்பு நிகழ்வு கடந்த ஞாயிறன்று இணையவழியில் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்