
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில், பேருந்துகள் பராமரிப்பு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 10-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3-ம் கட்ட தளர்வுகளில் 50 சதவீத பயணிகளுடன் பொது பேருந்து போக்குவரத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்