
கோயில் அன்னதான திட்டத்தில் இருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில், கோயில்களில் செயல்படுத்தப்பட்ட வரும் அன்னதான திட்டத்தின் மூலமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பாக அறநிலையத் துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்துஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக அறங்காவலரான கே.கே.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்