
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அதிமுக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு, ஈரோடு புறநகர் மாவட்டமாக செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு, இன்று முதல் அமைப்பு ரீதியாக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி, பெருந்துறை சட்டப்பேரவை தொகுதிகளையும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்