
தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள காவல் துறை அதிகாரிகளைப் பிடிக்க, சிபிசிஐடி பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 2019-ல் கடத்தி, சொத்துகளை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மற்றும் தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாச ராவ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடிபோலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்