
சென்னை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட என்யூஎல்எம் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களிடம் குறை கேட்புக் கூட்டம், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று பல்வேறு புகார்களை தெரிவித்தனர். அதை விசாரித்து தீர்வு காணுமாறு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் மாநகராட்சிக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்