
தமிழகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழியக்கம், தமிழர் சமூக மேம்பாட்டுப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் செயலாண்மைக் குழுக் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது. தமிழியக்கநிறுவனத் தலைவர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழர் சமூக மேம்பாட்டுப் பேரவைச் செயலர் எம்.ஜி.தேவசகாயம், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், சாலமன் பாப்பையா, கவிஞர் வைரமுத்து, கவிஞர் கலி பூங்குன்றன், நாஞ்சில் சம்பத், ஜெகத்கஸ்பர், பழ.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்