
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணை களில் இருந்து 1,750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் சாகுபடி பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்