
மதுரை டிஆர்ஓ காலனியைச் சேர்ந்தவர் கலைமோகன். நகர் காவல் உதவி ஆணையராக பணியாற்றிய இவர் 2012 மே 31-ல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு எதிரான நடவடிக்கையால் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று 2018-ல் வாங்கினார்.
2012-2018-ம் ஆண்டுக் குரிய விடுமுறைக் கால பணிக்கொடைக்கான நிலுவைத் தொகைக்கு வட்டியோடு ரூ.4.40 லட்சத்தைப் பெற நீதிமன்ற உத்தரவு பெற்றார். பணிக்கொடை வழங்க மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தனி உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டாலும், இதுவரை அத்தொகையைப் பெற முடியாமல் போராடுவதாக கலைமோகன் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்