
கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்று கூறி, கடைகளுக்கு சீல் வைப்பதை நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மீண்டெழுந்து வரும் நிலையில், கடைகளுக்கு சீல் வைப்பது, அடிக்கடி அபராதம் விதிப்பது போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்