
கோயம்பேட்டில் ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட துணி வியாபாரி மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சக்தி வடிவேலன் (35). துணி வியாபாரி. இவரது மனைவி செல்சியா (22). 6 மாத கர்ப்பிணி. சக்தி வடிவேலனுக்கு இடது மார்பில் உள்ள கட்டி தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெற, மனைவியுடன் கடந்த 14-ம் தேதி சென்னை கோயம்பேடு வந்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மனைவியை அமரவைத்துவிட்டு, நண்பரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்