
திருவான்மியூர் அருகே உள்ளகொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி (35). இவர் அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த நந்தினி (37), அவரதுகணவர் அருண் சாய்ஜி (36), திருவான்மியூரைச் சேர்ந்த ரேஸ்மா தாவூத் (35) ஆகிய3 பேரும் தமிழ்நாடு அரசு துறையான அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவிபொது மேலாளர், மின்வாரியத்தில் உதவி பொறியாளர் உட்படபல பிரிவுகளில் வேலை வாங்கித் தருவதாக 85 பேரிடம் ரூ.4 கோடிவரை மோசடி செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்