
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு பிந்தைய சிகிச்சைப் பிரிவு, புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறும்போது, “கரோனா தொற்றுக்கு பிந்தைய சிகிச்சைப் பிரிவில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒரு மருத்துவர், செவிலியர், இயன்முறை பயிற்சி அளிப்பவர், மன நல மருத்துவர், சிகிச்சை உதவியாளர்கள் ஆகியோர் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை பணியாற்றுவர். கரோனா பாதிப்புக்கு பின்பு சர்க்கரையின் அளவு அதிகரிப்பு, அதிக ரத்த அழுத்தம், மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் இருமல், சுவையின்மை, வாசனையின்மை, ஸ்டிராய்டு மருந்துசார்ந்த பிரச்சினைகள், பசியின்மை,உடல் எடை குறைதல், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவோர் இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்