
விருத்தாசலம் காந்தி நகரில் இடப்பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இருதரப்பினரும் வெட்டிக் கொண்டனர். இதில் 9 பேர்காயமடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருத்தாசலம் காந்திநகரில் வசிக்கும் மாலா(70) என்பவருக்கு சொந்தமான இடத்துக்கு அருகில் இருக்கும் புறம்போக்கு நிலத்தை சந்திராகாசு என்பவரது வாரிசுகள் அனுபவித்து வந்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் மாலாவின் பிள்ளைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித் தனர். இந்நிலையில் இரு தரப் புக்கும் இடையே தகராறு எழுந் துள்ளது. இதையடுத்து இரு தரப் பினரும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்