
தி.மலை மாவட்டத்தில் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத் தின் மூலம் 130 மணிலா நாட்டு மர செக்கு எண்ணெய் உற்பத்தி மையம் தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தை கடந்த 2020-21-ம் நிதியாண்டில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளை பொருள் என்ற அடிப்படையில், மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விளை பொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட உள்ள சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்