
வேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் ஏற்றிவர பேருந்து வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் உள்ள 138 கடைகளில் விவசாயிகள் சில்லறை வணிகம் செய்து வருகின்றனர். இங்கு, தினசரி சுமார் 30 ஆயிரம் கிலோ எடையுள்ள காய்கனி மற்றும் கீரை வகைகள் விற்பனையாகி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்