
திருநெல்வேலி மாவட்டம் செட்டிக் குளத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆட்சியர் வே.விஷ்ணு, அணுமின் நிலைய வளாக இயக்குநர் மனோகர் காட்போலே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றிலிருந்து வீணாகி கடலில் கலக்கும் தண்ணீரை மணக்குடி அருகே மின்நீரேற்றி மூலம் ராதாபுரம் கால்வாய்க்கு கொண்டுவந்து, 52 குளங்களில் தண்ணீர் பெருகச் செய்யும் திட்டப்பணிகளை கூடங்குளம் அணுமின் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்வது, அணுமின் திட்டப்பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகேயுள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, மிக்கேல் நகர், ஜார்ஜ் நகர் ஆகிய கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைப்பது, அணுக்கழிவுகளை அணுமின் திட்டப்பகுதிக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்