
நள்ளிரவில் எழுப்பிக் கேட்டாலும் எம்ஜிஆருக்கு ஓட்டு போடும் நீங்கள், எங்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என அரசு விழாவில் அமைச்சர் காந்தியின் பேச்சால் கலகலப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு ஊராட்சியில் உள்ள நரிக்குறவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்தனர். இதில், 20 பேருக்கு குடும்ப அட்டை மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்