
ஊரடங்கால் செங்கம் உழவர் சந்தை திறக்கப்படாமல் மூடி இருப் பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உழவர் சந்தை உள்ளது. இங்கு, காய்கறி விற்பனை செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். செங்கத்தை சுற்றியுள்ள குப்பநத்தம், வலசை, கொட்டாவூர், ஆண்டிப்பட்டி, அரசம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளையும் கீரை, பப்பாளி, கொய்யா, கத்திரி, வெண்டை, வாழை, பூசணி உள்ளிட்ட காய்கறிகளை தினசரி விற்பனை செய்து வருகின்றனர். செங்கம் நகர மக்களுக்கும் பயனடைந்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்