
சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறி பலரும் கைது செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருந்தால் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது, ஆளும்கட்சியாக மாறிவிட்டால், விமர்சிப்பவர்களை கைது செய்வதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
கடந்த மே 7-ம் தேதி திமுக அரசுபொறுப்பேற்ற பிறகு முகநூல், ட்விட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திமுக மற்றும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனனர். ஒருசிலர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்