
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நேற்று காலை தொடங்கியது.நாளை வரை 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்,அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்