
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, சென்னைக் குடிநீருக்காக திறக்கப்பட்டு வரும் கிருஷ்ணா நீர், கடந்த ஒரு மாதத்தில் 1.26 டிஎம்சி அளவில் பூண்டி ஏரிக்கு வந்தடைந்துள்ளது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னைக் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இருகட்டங்களாக 12 டி.எம்.சி. கிருஷ்ணாநீர் வழங்க வேண்டும். அந்த வகையில், கடந்த ஆண்டு செப். 18-ம்தேதி முதல், கடந்த பிப். 20-ம் தேதிவரை, கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் 7.656 டிஎம்சி அளவில் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்