
சிவங்கங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள மினிதான்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செபஸ்டின் ராஜ்(29). ராணுவ வீரர். இவர்,குஜராத் கட்ச் பகுதியைச் சேர்ந்தஷகீல் என்பவரிடம் ரூ.20 லட்சம் கொடுத்து, அதை தங்கத்தில் முதலீடு செய்யும்படி கூறியுள்ளார். ஆனால், பணத்தை திரும்பி கேட்கும்போது, திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்காக தனது அண்ணன் ஜான் ஆரோக்கியசாமி(32), நண்பர்கள் காளையார்கோவிலைச் சேர்ந்த ஜான்சன்(25), ராமநாதபுரம் திருவாடனை ராதானூரைச் சேர்ந்த முகமது பட்டாணி(29) ஆகியோருடன் குஜராத் சென்றார் செபஸ்டின் ராஜ்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்