
கடலூரில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள இரும்பினாலான பாலத்தை இடித்து தரை மட்டமாக்காமல், பகுதி பகுதியாக அப்பாலம் தானாகவே இடிந்து விழும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கடலூர் நகரின் மையப்பகுதியில் செல்லும் கெடிலம் ஆற்றின் ஒரு கரையில் நகராட்சியின் புதுநகரும், மற்றொரு கரையில் திருப்பாதிரிப்புலியூர் பகுதியும் அமைந்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்