
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் சாரம் பெட்ரோல் பங்க் முன்பு நேற்று மாலை கையெழுத்து இயக்கம் மற்றும் போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி டயர் வண்டி யில் பைக்குகள், எரிவாயு சிலிண் டருக்கு மாலை அணிவித்து வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்பி ஆகியோர் டயர் வண்டியை பழைய ஆட்சியர் அலுவலகம் வரை இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்