
கரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை மீண்டும் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க படகுச் சேவை தொடங்கப்பட்டது. மதுரை மாவட்ட மக்களுக்குப் பொழுது போக்க சுற்றுலாத் தலங்கள் பெரிதும் இல்லாத நிலையில், மாரியம்மன் தெப்பக்குள படகு சேவை மக்களைக் குதூகல மடையச் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்