
கிரிஷ்மா மாங்கூழ் ஏற்றுமதி திட்டத்தை செயல்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மாவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மா உற்பத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சுமார் 3 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் வறட்சி, மழையின்மை, மாங்கூழ் தொழிற்சாலைகளின் சிண்டிகேட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவிவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்