
நவீன வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியலை போதிக்கும் மையமாக கோவையில் மாநகராட்சி சார்பில் சுமார் 25 ஏக்கர்பரப்பளவில் புதிய உயிரியல் பூங்காவை கட்டமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
கோவையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள நேரு விளையாட்டு அரங்கு அருகில் மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில்வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்