
கோவை மசக்காளிபாளையம் நீலிகோனார் வீதியில் பத்மநாபன்-செல்வராணி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா (8) என்ற இரு மகள்கள் இருந்தனர். பத்மநாபன் மது பழக்கத்துக்கு அடிமையானவர். செல்வராணியும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில், 2018 டிச. 6-ம் தேதி மாலை, செல்வராணியிடம் மது குடிக்க பணம் கேட்டு பத்மநாபன் அடித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார், "மறுநாள் காலை காவல் நிலையம் வர வேண்டும். அதுவரை பிரச்சினை செய்யக்கூடாது" என கூறினர். அதற்கு பத்மநாபன், "எனது 2 குழந்தைகள் மட்டும் வீட்டில் இருக்கட்டும். மனைவியும், என் அம்மாவும் வீட்டின் வெளியே இருக்கட்டும். உள்ளே வரக்கூடாது" என தெரிவித்துள்ளார். பின்னர், 2 குழந்தைகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தூங்க வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்