
வாலாஜா அடுத்த மேல் வீராணம் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைளுக்கு ரசீது வழங்காததை கண்டித்து விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சித்தஞ்சி, அரும்பாக்கம், கீழ்வீதி, சங்கரன்பாடி, மேல் வீராணம், கீழ் வீராணம், வேடந்தாங்கல், ஜோதிபுரம், குன்னத்தூர், மேச்சேரி, சின்ன ஈசலாபுரம், காவேரிப்பாக்கம், பெருமாந்தாங்கல், தாமரைப் பாக்கம், வளையாத்தூர், போளிப்பாக்கம், ரெட்டிவலம், செய்யூர், அணைக்கட்டா புத்தூர், மகேந்திர வாடி உள்ளிட்ட 23 கிராமங்களில் கடந்த 15-ம் தேதி தொடங்கி வரும் 24-ம் தேதி வரை விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்