
சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருத்தி அமைக்கப்பட்ட மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான், உறுப்பினர்கள் தமீம்அன்சாரி, ஹர்பஜன்சிங் சூரி, மன்ஜித் சிங் நய்யார், பைரேலால் ஜெயின், எல்.டான் பாஸ்கோ, டாக்டர் எம்.இருதயம், மவுரியார் புத்தா பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்