
கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 16-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது. இதனிடையே, கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்