
ஆனைமலை பழைய ஆயக்கட்டு பகுதியில் நெற்பயிர்களை கடித்து நாசம் செய்யும் எலிகளை அழிக்க வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஆனைமலை கரவெளி பகுதியில், விவசாயிகள் தற்போது முதல் போக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நெற்பயிரில் கதிர்விடத் தொடங்கிய நிலையில், தண்டுப் பகுதியை எலிகள் கடித்து நாசம் செய்ய தொடங்கி உள்ளன. இதனால் மகசூல் குறைவதை தவிர்க்க எலிவேட்டையில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்