
பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துவரை, பாசிப் பயறு, உளுந்து, தட்டைப் பயறு, கொண்டைக்கடலை போன்ற பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பயறுவகைப் பயிர்கள் புரதச்சத்தின் அளவு, தானியங்களில் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது. பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதால், அவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்முடிச்சுகளில் நிலைநிறுத்தி மண்ணின் வளத்தை கூட்டுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்