
அரசுப் பேருந்துகளில் நிற்க இடமின்றி அலைமோதும் கூட்டத்தால், திருப்பூர் மாவட்டத்தில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில், பொதுப் போக்குவரத்தான அரசுப் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதில் போதியசமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டாலும், சில பேருந்துகளில் மட்டுமே அவை கடைபிடிக்கப்படுகின்றன. பல பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்