
ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு, சேலத்தில் பொதுமக்கள் தேங்காயை தீயில் சுட்டு வழிபடுவது வழக்கம். இதிகாசக் கதைகளை மேற்கோள் காட்டி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதற்காக தேங்காயை தரையில் தேய்த்து, அதன் மீதுள்ள நாரை அகற்றிவிட்டு, தேங்காயின் ஒரு கண்ணை துளையிட்டு, அதில் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், பொட்டுக்கடலை, ஏலக்காய் உள்ளிட்ட கலவையை தேங்காய்க்குள் நிரப்பி பின்னர், அழிஞ்சான் குச்சியால் தேங்காய் துளையிடப்பட்ட பகுதியில் சொருகி, தீயில் தேங்காயை காட்டி பொதுமக்கள் தேங்காய் சுடும் நிகழ்ச்சியை கொண்டாடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்