Sunday, July 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/26/large/697244.jpgபண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மரங்கள் மாயம்: செங்கல்சூளைக்கு அனுப்பப்பட்டதா?

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த மரங்கள் திடீரென மாயமாகியிருப்பதோடு, அவைகள் கரோனா பொதுமுடக்க காலத்தில் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு அனுப்பபட்டதாகக் கூறப்படுகிறது.

பண்ருட்டி கெடிலம் ஆற்றுக் கரையோரம் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கிவருகிறது. அலுவலக வளாகத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த 50 ஆண்டுகால புளியமரம், இலுப்பை மரம், பனைமரம் உள்ளிட்டவை திடீரென மாயமாகியிருந்ததோடு, ஆற்றை ஒட்டிய பகுதியில் மண்ணும் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தபோது, "அலுவலகத்தின் சுற்றுப்புறத்தில் கருவேல மரங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் வெட்டி சுத்தம் செய்தனர். ஆனால் மரங்கள் என்னவானது என தங்களுக்குத் தெரியாது" என்று தெரிவித்தனர். இதையடுத்து பெயர் கூற விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில்," கடந்த ஜூன் மாதம் கரோனா பொதுமுடக்கத்தின் போது, மரங்கள் வெட்டப்பட்டு 16 லாரிகளில் கொண்டு செல்லப் பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...