
புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் புதுச்சேரி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விமான நிலைய இயக்குநர் விஜய் உபாத்யாவிடம் விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
விமான நிலைய இயக்குநர் விஜய் உபாத்யா, "புதுச்சேரியில் விமான நிலையம் 90 பேர் பயணிக்கக்கூடிய ஏடிஆர் ரக விமானங்களை இயக்க தயாராக இருக்கிறது. தற்போது 1,500 மீட்டர் நீளமுள்ள ஓடுதளத்தை 1,850 மீட்டர் ஆகவும், ஓடுதளத்தை ஒட்டி காலியாக உள்ள இடத்தை 90 மீட்டரில் இருந்து 140 மீட்டராகவும் நீட்டிக்க வேண்டும். அத்துடன் விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் உயரமாக வளர்ந்துள்ள மரங்களையும் அகற்றினால் 120 பேர் பயணிக்கக்கூடிய ஏர் பஸ் 319 வகையிலான விமானத்தையும் புதுச்சேரி விமான நிலையத்தில் இயக்க முடியும்" என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்